மார்கழி குளிரில் போர்வையை உடம்பு முழுக்க சுற்றிக்கொண்டு, Fanனை மிதமான வேகத்தில் வைத்துவிட்டுப் படுத்தால், கவலையைத் தாண்டிய உறக்கம் வந்துவிடும். ஆனால், அப்படிப் படுத்திருக்கும் நேரத்தில் நம்மைத் தூங்க விடாமல், அடிக்கும் குளிரையும், போர்வைக்குள் இருக்கும் மிதமான வெப்பத்தையும் கொஞ்சம் கூட மதிக்காமல், மறந்த நாளிலிருந்து மறக்காமல் திகட்டும் முன்னால் காதலியின் நினைவினைப்போல, நம்மைத் தொந்தரவு செய்ய வேண்டுமென்று உருவாக்கப்பட்டதுதான் Netflixயின் ‘பாவக்கதைகள்’. அது கொஞ்சம் தொந்தரவும் செய்யத்தான் செய்கிறது.
‘மானம் தானே வேட்டி சட்ட, மத்ததெல்லாம் வாழ மட்ட’னு போன வாரம் Vijay TVயின் ‘நீயா நானா’வில் ஒரு சம்பவத்தை நகைப்புடன் பார்த்துப் பல Templateகளை உருவாக்கி, மானத்தை ஒரு நகைப்பாய் ரசித்துப் பார்த்தோம். அந்த ஒரு வாலிபப் பையன் ஒரு கேலிச்சித்திரமாக மாற்றினோம்(நான் உட்பட). இந்த வாரம் பெற்ற பிள்ளையென்றே ஆனாலும் மானத்துக்காகவும், ஜாதியின உணர்வுக்காகவும் கொலை செய்யும் தந்தைகளை(பாவக்கதை படி) ஒரு நிமிடம் பாவம் பார்க்க வைப்பதுதான் பாவக்கதை. உண்மையில் நீயா நானா பையன் மீது பாவமும், இந்த கொலை செய்யும் தந்தைகள் மீது வெறுப்பும் வந்திருக்க வேண்டும்! வளர வேண்டிய வயதில், வாழ்க்கையில் இன்னும் வெகு தூரப்பயணம் இருக்கப்போனதும், இந்த பையன் இப்படி ஆகிவிட்டானே(ஆக்கிவிட்டார்களே) என்ற பாவமும். இத்தனை வயதாகியும், வாழ்வில் பலவினை பார்த்த பிறகும் இந்த கொலைகாரத் தந்தைகள் இப்படி இருக்கிறார்களே என்ற வெறுப்பும் நமக்கு வர வேண்டுமோ? ஆம், வெறுப்பையும், கோபத்தையும், பாவத்தையும், அன்பையும் மாற்றி மாற்றிக்காட்டுவது நம் வழக்கமாயிற்று!
அந்தப் பையனின் இந்நிலைக்கு இப்படிப் பட்ட பல கொலைகார தந்தைகள் தான் காரணமாக இருக்க முடியும். பிரகாஷ்ராஜை சில சிறு பசங்க வந்து கேள்விக்கேப்பானுங்க ‘ஓர் இரவு’ படத்துல. அவனுங்களையெல்லாம் வெரட்டிவிட்டு அட்லி சொல்ற மாரி ‘என் பொண்ணுக்கு நான்தாண்டா செய்வ’ன்னு மொத்த கதையும் முடிச்சிருப்பார் அந்த மனுஷன். நீயா நானால கோபி ‘அதென்னபா வீர நட, கொஞ்சம் நடந்துக்காமி’ன்னு கேட்பார், தன் மகளை மானத்துக்காகவும், ஜாதியின கொல்கையைக் காப்பாற்றவும் தன் கையாலையே கொலை செய்துவிட்டு, வீட்டுக்குலிருந்து வெளியே நடந்து வருவாரே அதா வீர நடப் போல!
‘இந்த தடவ விற்றலாம்னு இருகான், நம்ம பொண்ணுடா’ன்னு ‘Love Panna Vitranum’படத்துல அந்த கொலைகாரத்தந்தை கூறும் போது,
கூடவே இருக்கும் ஒரு Character – ‘நீ என்னையா இப்படி பேசுர..’ன்னு ஒரு அர பக்க dialogயை பேசி ஓரளவு திருந்த முயற்சிக்கும் ஒரு மனுஷக்கூட சுத்தியிருப்பவர்கள் விடுவதில்லை. ‘ஓர் இரவு’ படத்துல கூட அதே போலத் தான் அந்த சித்தப்பா characterன்னு நினைக்கிற! சிலர் மாற விரும்பினாலும் நீயெல்லாம் இப்படி மாறலாமா? உன் மானம், மரியாதை என்னவாகும் என்று யோசித்தாயா? என்பது போல ஜாதியினை தலைக்கேரியக்கும்பலின் போதனையாக இருக்கிறது!
இன்றும் இந்த சமூகத்தில ஜாதியின அழுத்தம் இல்லையெனவும், நாம் இருக்கிற இடம் தெரியாமல் இருப்போம் எனவும், ஜாதியின எண்ணம் இன்றும் இருக்கிறதா? அதெல்லாம் இப்போ யாரு சார் பாக்குறது? ஜாதிலாம் அழிஞ்சிப்போச்சி! இப்படி கூறுவோரும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் ‘ஜாதி வெறியர்களை’த் தாண்டி ஆபத்தானவர்கள்.( தூங்குறவன எழுப்பலாம், தூங்குற மாறி நடிக்கிறவன எழுப்பமுடியுமா?). நமக்கு எதுக்கு அரசியல், ஜாதி பேச்செல்லாம் என்போர்கள், மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் ஜாதியின கொடுமைகளுக்கு ஆதரவு செய்பவர்களே!
ஓர் இரவு, Love பண்ணா Vitrunam ஆகிய இரு படத்திலும், கொலைசெய்யப்பட்ட Characterயின் மீது பரிதாபம் ஒரு பக்கம் இருந்தாலும், கொலைசெய்யும் தந்தை character மீது ஒரு Soft Corner வருகிற மாறி Sceneகள் அமைந்திருக்கும்! முக்கியமாக Love பண்ணா Vitrunam படத்துல புள்ளைய current வச்சி கொன்றுவிட்டு ‘மன்னித்துவிடு செல்ல மகளே…’ Slow motionல பாட்டு வரும்.
அதெல்லாம் ஒரு துளி கூட ரசிக்க முடியவில்லை.மேலும் LGBT யாகவே அந்த கதை இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
ஓர் இரவு படம் மட்டுமே உண்மைக்கு மிக அருகிலிருந்தது போல் எனக்குத் தெரிந்தது. படம் முழுக்க ஒரு tension இருந்துகொண்டே இருந்தது. Sai Pallaviயை (😍😍😍) Premam முதலே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன், அவள் ஒரு எதார்த்தமாக நடிகையென்று! அந்த படத்திலும் ‘நீ வீட்ட விட்டு ஓடிப்போனதினால் எங்கள ஸ்கூலுக்கு அனுப்பாமல் நிறுத்திட்டாங்க…’ என்ற வசனம்,
ஜாதியின உணர்வு ஏன் இன்றும் குடும்பத்தில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. என்னைப் பொருத்தவரை பெண்ணின் கல்விமூலம் மட்டுமே ஜாதிக்கொடுமைகள் குறைய வாய்ப்புள்ளது! இதற்கு அடுத்த sceneலையே, ‘நீ எப்படி இவ்வளவோ சுதந்திரமா இருக்க’ என்றதற்கு. ‘நீ படிச்சா உனக்கும் இந்த சுதந்திரம் கிடைக்கும்’ என்று வரும். ஒரு Upper Middle Classல் இருக்கும் ஒரு பெண்ணின் சுதந்திரம் படிப்பில் இருக்கும் போது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் ( Financially & ஜாதியின் பெயரால்) பெண்கள் எதனை முக்கியமாக எடுத்துக்கொல்லவேண்டும்? ‘படிப்பு’. அந்த படிப்பை அவர்களிடமிருந்து பறிக்கப் பல வேளைகள் நடந்துக்கொண்டிருகிறது நம்நாட்டில்!
முடிவாக, மானம் என்ற ஒன்றை தலைக்கேற்றி அதை ‘தன்மானமாக’ மாற்றி, தன்மானத்தைப் பிறருக்காக விட்டுக்கொடுக்கக் கூடாது என்று தலையில் பதிய வைத்ததினாலையே இந்த விளைவுகள் எல்லாம். இவையெல்லாம் ஜாதி, மதம் வெறிகளின் By Product தான். கொல்ல வேண்டியது மகள்களையோ மகன்களையோ அல்ல, மண்டைக்குள் இருக்கும் சமத்துவமில்லாத எண்ணங்களை! கொல்லாவிட்டால் பல பாவக்கதைகள் அவர்களின் பரம்பரையில் தொடரத்தான் செய்யும்!
பின் குறிப்பு : ஜாதி என்பது தமிழ்ச் சொல் அல்ல,சாதி மட்டும் தான் தமிழிலுண்டு. ‘சாதித்தல்’ – சிறந்தவை என்பதே அதற்குப் பொருள்! சிறந்தக்காய் – சாதிக்காய், சிறந்த பூ – சாதிமல்லி இப்படித்தான் ‘சாதி’ சொல் தமிழிலிருந்தது. ‘ஜாதி’ என்பது Sanskrit சொல். பகவத்கீதையில் ஒரு ஸ்லோகமே உண்டு. ‘சமூகம்’ என்பதே தமிழ்ச் சொல்.(அறியப்படாத தமிழ்மொழி – Twitter : @kryes). இருந்தாலும் இக்கட்டுரையில் ‘ஜாதி’ என்றே குறிப்பிட்டுள்ளேன். காரணம்- அழிக்கப்படவேண்டியவை என்மொழியில் Parasiteஆன அழிய வேண்டாம். எந்த மொழியிலிருந்து வந்ததோ அங்கையே வைத்து அழிக்கப்பட வேண்டும்!