போன கதையை அப்படியே ஒப்பிச்சிடன். சுகிர் பேஷன்ட் சுவீட்ட பாத்த மாரிதான். இனி வரும் கதைக்கு சினாப்ஸிஸ் மட்டும் தான். நீங்களே குடித்திருக்கும் லிக் வச்சி பாத்துகோங்க….
இந்த கதையில் மூனே கேரக்டர் தான். கணவன், மனைவி, மனைவியை இழந்த மற்றோறு கணவன். ‘தலைவாசல்’ விஜய்க்குனே எழுதப்பட்ட கேரக்டர் மாரி இருக்கும் அந்த கணவன். ‘தான்’ சொல்வதுதான் உண்மை/சத்தியம் (அது பொய்யாகவே இருந்தாலும்)என்று தன்னைதானே நினைத்துக்கொள்ளும் ஒரு கேரக்டர்தான் அந்த கணவன். இப்படிப் பல பேர நம்ம தினசரி வாழ்க்கைல பாத்திருபோம். பார்த்தது மட்டும் இல்லமால் வெறுத்திருப்போம். வெறுக்கப்பட்ட விஷயங்களைக் கூட அழகாகவும் புரியும்படி சொல்வதில்தான் ஒரு கலைஞனின் வெற்றி. உதவி வேண்டுமென்று ஒருவர் வருவார் (மனைவியை இழந்த கணவன்) … உதவியை செய்யனுமேன்று மனைவி கூறுவாள். கணவன், உதவி கேட்டு வந்தவரின் உண்மைத் தன்மையை ஆராய்வார்.(உள்ளம் கேட்குமே அசின் போல). கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு எழும். பின்பு நிஜத்தை மறைத்து தன்னை எப்படி அந்த கணவன் உயர்த்திக்கொள்வதாக நினைத்துக்கொள்கிறான் என்பதுதான் கதை… கதையின் இறுதியில் பாலுமகேந்திரா பேசுவார். இது ஒரு விதமான மன நோய் என்று இப்போ தான் எனக்குத் தெரியும்!