“காலையில ஏன் இந்த ஊரு இப்படி இருக்கு? இன்னு சூரியன் வரலையே, அதான் ஒரே இருட்டா இருக்கா? அதுசரி, பகலையே நம்மல கண்டுக்க மாட்டானுங்க இருட்டல நம்ம இருக்க கலர்ல நம்மல எங்க அவனுக்கு தெரிய போகுது?” என்று மூன்று நாட்களுக்கு முன்பு பிறந்த காகம் ஒன்று தன் கூட்டிலிருந்து வெளியே வந்தது.
பக்கத்து கூட்டில் இருக்கும் மற்றோரு வயதான காகம் “கார்ர்ர்ர்… கார்ர்ர்ர்” என்று குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தது! இருட்டாயிருந்தாலும் பரவாலனு மூன்று நாட்களுக்கு முன்பு பிறந்த காகம் தன் சிறகை விரித்து பறக்க தொடங்கியது…
“இன்னு வெடியல கொழந்த… இருட்டல போன தெச மாறி போய்டுவ… வெடியட்டும் நானே உன்ன கூட்டிட்டு போற” என்று கிளம்பிய காகத்தை தன் உறக்கத்தை துறந்து, குறட்டையை நிறுத்தி அந்த வயதான காகம் தடுத்தது. “இருட்டா இருந்தா என்ன? எனக்குதான் கண்ணு இருக்குல… எல்லாம் நான் பாத்துகுற… நீ தூங்கு” என்று இளங்காகம் பயமறியாது என்ற தோனியில் கொழந்த காகம் பதிலலித்தது.
பதிலலித்த வேகத்தில் கொழந்த காகம் கூட்டைவிட்டு பறந்தது. வயதான காகம் மீண்டும் “கார்ர்ர்ர்ர்… கார்ர்ர்ர்” என்று தன் குறட்டையைத் தொடங்கி உறங்கியது. சில நிமிடங்கள் கழித்து, பறந்த காகம் தன் தலையில் சிற்றளவு ரத்ததுடம் தன் பக்கத்து கூட்டிருக்கு வந்து வயதான காகத்தை எழுப்பியது. ரத்த வாடையை நங்கு அறிந்த அந்த வயதாக காகம், எழுப்பதற்கு முன்பே எழுந்தது…
“நான் தா போக வேணானு சொன்னனே கேட்டியா?” என்ற தோனியில் வயதான காகம் ஒரு பார்வையை வைக்க…
“சரி உடு அடிப்பட்டு தான வாழ்க்க நடத்தனும்” என்ற தோனியில் கொழந்த காகம் முறுபார்வை விட்டது.
“என்ன ஆச்சி?”
“ரொம்ப தூரம் போகல, அந்த கீத்து கூரை இருக்கும் வீட்டைத்தாண்டி ஒரு ஓட்டு வீடு இருந்தது, அந்த வீட்டின் முற்றத்தில் நிறைய தண்ணீர் அண்டாவில் வைத்திருந்தார்கள். காலைல எழுந்ததுல இருந்த நல்ல தாகம்… அதா…அந்த தண்ணீரை குடிக்கலா வேகம பறந்தனா….” என்று இழுத்தது…”போன வேகத்துல நடூல இருந்த கம்பிய பாக்காம இடுச்சிகிட்ட.. அதான.” என்று தன் அணுபவத்தை முன்னிருத்தியது அந்த வயதான காகம்.
“ஆம! ஏன் அங்க கம்பி போட்டிருக்காங்க… ஒரு வாய் தண்ணி குடிக்க முடிதா?”
“அந்த முற்றம் முழுக்க தண்ணீர் இருக்க வீட்டில் நான் தண்ணீ குச்சிருக்கேன்” என்றது வயதான காகம் பெறுமையுடன்…
“உனக்கு மட்டும் எப்போ தொறந்து விட்டாங்க அவனுங்க?”
“வெயில் காலத்தில் பறவைகளுக்கு தாகமெடுக்கும்னு ஒரு அண்டா முழுக்க தண்ணி வீட்டுக்கு வெளிய வச்சிருப்பாங்க…”
” ஏன்? மத்த காலத்துல நமக்கெல்லாம் தாகம் எடுக்காத?” சலிப்புடன் கொழந்த காகம்…
“வெயில் காலத்திலாவது வச்சிருக்காங்களேனு சந்தோஷப்படு… ” வயதான காகம் கூற
கோவத்துடன் கொழந்த காகம் ” இதுல சந்தோஷப்பட என்ன இருக்கு? தண்ணி என்ன அவன் வீட்டு சொத்தா? அவனுங்க வெயில் காலத்துல தண்ணி வைக்குறது ஒன்னும் நம்ம தாகத்த தனிக்க இல்ல, ஒரு பறவையின் தாகத்தை தனிச்சிட்டோம்னு அவனுங்க அவனுங்களையே பெறுமைய நினைக்கத்தான்…உன்மையா நமக்கு வச்சிருந்தானுங்கனா எப்போவும் ஒரு அண்டால தண்ணி இருக்கனும்ல?” கூறியது…
“தலைல இந்த அடி பட்டிருக்கும் போதே நீ இந்த பேச்சி பேசுரியா?” எளக்காரமாய் வயதான காகம் கூற அதை கண்டு கொல்லாமல் கொழந்த காகம் தன் கூட்டிற்குள்ளே சென்றது…
“நேத்து பொறந்த பய… என்ன பேச்சி பேசுறா பாரு… அந்த வீட்ட போய் திட்றா.. அம்மாவாச, கிருத்திகனா நமக்கு சோறு வைக்காம.. நம்மா சாப்புடாம அவங்க சாப்புடவே மாட்டாங்கடா… அவங்கள போய் இப்படி பேசுறா பாரு…” என்று முற்றத்து வீட்டின் பெறுமையை வயதான காகம் கறைத்தது…
“அதே…. பதில் தான் பெருசு…… ஏன் தினமும் வைக்காம அன்னைக்கு மட்டும் வைக்கிறங்க? உண்மையாலே நம்ம பசிய போக்கனும்னு நினச்சா.. வத்தல் காயவைக்கும் போதும், வடகம் காயவைக்கும் போதும் ஏன் உன்ன வெரட்டுறானுங்க? உனக்கு பசி போக்க அவனுங்க சோறு வைக்கர்தவிட உனக்கு பசிக்கிதோ இல்லையோ சோறு வச்சிடோம்பானு அவங்க திருப்தி அடையதான் சோறு வைக்கிறனுங்க…” வீட்டிற்கு உள்ளிருந்த படியே கொழந்த காகம் கத்தி கரைத்தது….
“மூனு நாள் முன்னாடி பொறந்த பயலுக்கு எப்படி இவளோ அறிவு வந்தது?” என்று வயதான காகம் எண்ணி கொண்டிருக்கும் போது… முற்றத்து வீட்டில் எல்லா விளக்கையும் போட்டார்கள்..
வெளிச்சம் வருவதைகண்டு “என்ன பெருசு விடிஞ்சிடுச்சா?” என்றது கொழந்த காகம்…
“அதுக்குல்லையா? அதுக்கெல்லாம் இன்னு நாழி இருக்கு…” என்றது வயதான காகம்…