Absolute Barbeque / Coal Barbeque ல ஃபுல் Buffet சாப்டு செரிமானம் ஆகாமல் தவிக்கும் நமக்கு ‘அம்மா உணவகத்தின்’ அருமை புரிவதில்லை. பசி பத்தும் செய்யும், இவ்வுலகில் எல்லா உணர்வைவிட பசிதான் உயர்ந்தவை. ஏழ்மையும் பசியும் கூடிவிட்டால் அது கொடுமையிலும் கொடுமை. இந்த கொரோனா என்னை அப்படி ஒரு நிலைக்குத்தல்லியது 2020ல்.
March/April/May 2020 Full Lockdown போட்டிருந்த சமயம். ஊரில் ஒரு ஓட்டலும் இல்லை. நான் சென்னையில் தனியாக மாட்டிக்கொண்டேன். கையில் காசு இருந்தும் உணவிற்கு வழியில்லை. Biscuit/Bread/Snacks மூன்று வேலையும் உண்ணமுடியவில்லை.
பணமிருந்தும் பசியுடன் அலைந்த காலம். அப்போதான் ‘அம்மா உணவகங்கள்’ திறந்திருக்கும்னு NEWSல பாத்த. அதுக்கப்புரம் மூனு மாசம் தினமும் – மதியமும் இரவும் அம்மா உணவகம் தான். உண்மையில் உணவின் தரம் பல ஓட்டல்களைவிட சிறப்பாக இருந்தது. ஒரு ₹30 ஒருந்தால் போது ஒரு நாள் முழுக்க வயிரு ரொம்ப சாப்பிடலாம்.
இந்த போட்டோ ஒரு நாள் அம்மா உணவகத்தில் நான் இரவு உணவு வாங்கிட்டு வரும் போது எடுத்தது. மூன்று மாதமும் நான் எப்படி அம்மா உணவத்தை நம்பி இருந்தேன், அம்மா உணவகம் எனக்கு எந்த அளவிற்கு உதவியாக இருந்தது என்பது இந்த போட்டோ தெளிவாக விளக்கும்.
அதிமுகவின் இத்தனை ஆண்டின் சாதனையில் ‘அம்மா உணவகத்தை’ தான் நாம் முதலில் வைப்பேன். அப்படி பல பேரின் பசியை போக்கிக்கொண்டிருக்கின்ற அம்மா உணவகத்தை , பெயர் மாற்றாமல் தொடர்வது திமுக வின் ஒரு பெருந்தன்மை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நான் இதை திராவிடத்தின் பழக்கமாக நான் பார்கிறேன்.
காமராசர் மதிய உணவு திட்டம்போட்டார், கலைஞர் காலையும் சேர்த்து போட்டார், எம்.ஜி.ஆர் அதோடு முட்டை சேர்த்து சத்துணவாக மாற்றினார். இதுவே திராவிட காலாச்சாரம்/வாழ்வியல். பொருளாதாரத்தில் அடிதட்டு மக்களின் உயர்வே ஒரு நாட்டின் உயர்வு. இது சில சங்கிகளுக்கு புரியாமல் பஸ்ல மகளீர்க்கு இலவசம கொடுக்குறத கேலி பேசுகிறார்கள். இதை பற்றி தனியாக ஒரு கட்டுரையில் விரிவாக பார்ப்போம்….